தாமரை மொட்டுப் போல

பத்து அல்லது பதினொன்று வயதுக்குள்ளேயே பூக்களும் பூக்களை விற்பவர்களும் எனக்கு அறிமுகம் . சைவம் சார்ந்த ஒரு குடும்பத்தில் ஆணிவேராக இருக்கும் நம்பிக்கையின் பொருட்டு கடவுள் நம்பிக்கை , வழிபாடுகள் , கடவுள் மறுப்பும் கூட இயல்பானதே . அடர் சிவப்பில் செம்பருத்தியும் தளுதளுக்கும் மஞ்சள் நிறத்தில் தங்கரளிப் பூக்களும் , ( தங்கரளிப் பூக்களின் பின்புறம் வாய்வைத்து தேன்உறுஞ்சும் குழைந்தைகள் இன்றும் இருக்கிறார்கள் ) எளிமையான சங்கு புக்ஷ்பங்களும் , மௌனமிக்க நந்தியாவட்டை பூக்களுமே எனது முதல் பூக்கள் . மாலை நேரத்தில் விளக்குச் சரம் கொண்டு வரும் பெண்ணே நான் அறிந்த முதல் பூ வியாபாரி . ( என் அம்மாவின் சிநேகிதி வட்டத்தில் இவளுக்கு தனியிடம் ) O O O மார்கழி மாதத்தில் வாசலில் சாண உருண்டையில் செருகி நிற்கும் பூக்கள்...