Posts

கோடுகள் ( முரளி கண்ணன் ) பத்திரிக்கை கேள்விகளுக்காக பூமா ஈஸ்வரமூர்த்தியின் பதில்கள் :

Image
கோடுகள் ( முரளி கண்ணன் ) பத்திரிக்கை கேள்விகளுக்காக பூமா ஈஸ்வரமூர்த்தியின் பதில்கள் : 0.01    ) ஒரு படைப்பாளிக்கு வாழ்வு குறித்து எத்தனை தேடல் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் இருக்கலாம் . அதோடு அவன் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம் . அவன் பதில்களை அல்லது தீர்வுகளை அல்லது முடிவுகளையும் கூட கண்டடையலாம் . ஆனால் ஒரு போதும் அவன் அறுதியான முடிவுகளுக்கு - அதன் பிறகு அதில் வேறு எதுவும் இல்லை என்பது போல வரமுடியாதவனாக இருக்க வேண்டும் . ஒரு படைப்பாளியை இப்படி வரையறுக்க முடியுமா ? ஒரு விதையை நீங்கள் கண்டெடுக்கிறீர்கள் நீங்கள் இதுவரை தேடிக் கொண்டிருந்தது அதுவே என உறுதி கொள்கிறீர்கள் நல்ல நிலம் பார்த்து விதைத்து நீரூற்றி வளர்க்கிறீர்கள் செடி மரமாகி கிளபரப்பி பூத்து குலுங்கி காய்த்து மறுபடியும் விதைகளையே தருகிறது வாழ்விலும் படைப்பிலும் இதுவே நிகழ்கிறது ஒரு தேடுதல் பல தேடுதலைகளை கண்டெடுத்து அது ஒரு போதும் முற்று பெறுவதில்லை பிரக்ஞாபூர்வமான வாழ்விலும் படைப்பிலும் இதுவே நிகழ்கிறது 0.02    ) வாழ்வை ஒருவன் எப்படி பார்க்கிறான் என்...

தாமரை மொட்டுப் போல

Image
பத்து அல்லது பதினொன்று வயதுக்குள்ளேயே பூக்களும் பூக்களை விற்பவர்களும் எனக்கு அறிமுகம் . சைவம் சார்ந்த ஒரு குடும்பத்தில்  ஆணிவேராக இருக்கும் நம்பிக்கையின் பொருட்டு கடவுள் நம்பிக்கை ,  வழிபாடுகள் , கடவுள் மறுப்பும் கூட இயல்பானதே . அடர் சிவப்பில் செம்பருத்தியும் தளுதளுக்கும் மஞ்சள் நிறத்தில் தங்கரளிப் பூக்களும் , ( தங்கரளிப் பூக்களின் பின்புறம் வாய்வைத்து தேன்உறுஞ்சும் குழைந்தைகள்  இன்றும் இருக்கிறார்கள் ) எளிமையான சங்கு புக்ஷ்பங்களும் , மௌனமிக்க  நந்தியாவட்டை பூக்களுமே எனது முதல் பூக்கள் . மாலை நேரத்தில் விளக்குச் சரம் கொண்டு வரும் பெண்ணே நான் அறிந்த முதல் பூ வியாபாரி . ( என்  அம்மாவின் சிநேகிதி வட்டத்தில் இவளுக்கு தனியிடம் )                 O          O          O மார்கழி மாதத்தில் வாசலில் சாண உருண்டையில் செருகி நிற்கும் பூக்கள்...